Published : 12 Apr 2017 10:51 AM
Last Updated : 12 Apr 2017 10:51 AM

திருமலையில் அரசு ஊழியர் மாயம்: நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? என போலீஸார் விசாரணை

திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அரசு ஊழியர் நேற்று திடீரென மாயமானார். இவர் திருமலையில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் மூழ்கி உயிரிழந் திருக்கலாமென சந்தேகிக்கப்படு கிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் சுப்ரமணியம். இவர் ஏழுமலையானைத் தரிசிக்க நேற்று திருமலைக்கு சென்றார். முதலில் தும்புரு தீர்த்தத்துக்கு சென்றார். பின்னர் அவரைக் காணவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர் கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் நடத்திய விசாரணையில் ஒரு பக்தர் தும்புரு தீர்த்தத்தில் இறங்கி மூழ்கியது தெரியவந்தது.

எனவே, சுப்ரமணியம்தான் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலா மென போலீஸார் கருது கின்றனர். திருமலை போலீஸார் சுப்ரமணியத்தை தேடி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x