Published : 13 Jun 2016 07:43 AM
Last Updated : 13 Jun 2016 07:43 AM

எய்ட்ஸ் பாதித்தோருக்கு மேற்குவங்கத்தில் 2 ரூபாய்க்கு அரிசி

மேற்குவங்கத்தில் பாலியல் தொழி லாளர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகள் ஆகியோ ருக்கு ஒரு கிலோ அரிசி, 2 ரூபாய்க்கு வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். பாலியல் தொழிலாளர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை.

ஏழை தொழு நோயாளிகள், காது கேளாதோர், வாய் பேச முடியாதோரும் பின்னர் இத்திட் டத்தில் இணைக்கப்படுவார்கள். முதல்கட்டமாக, மாநிலம் முழு வதும் ஒரு லட்சம் பயனாளிகளை இத்திட்டத்துக்காக அடையாளம் காணும் பணியில் உணவுத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படு வார்கள். அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் திட்டம் அமல் படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x