Published : 16 Aug 2016 10:12 AM
Last Updated : 16 Aug 2016 10:12 AM
அசாமில் 5 இடங்களிலும் மணிப் பூரில் 2 இடங்களிலும் தீவிரவாதி கள் நேற்று வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். என்றாலும் இதனால் உயிரிழப்பு ஏதுமில்லை.
அசாமின் தின்சுகியா, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத 5 இடங்களில் குண்டு வெடித்தது. இதுபோல் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 2 இடங்களில் குண்டு வெடித்தது.
உல்பா அமைப்பின் ஒரு பிரி வான பரேஷ் பரூவா தலைமை யிலான குழு இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT