Published : 08 Sep 2018 11:20 AM
Last Updated : 08 Sep 2018 11:20 AM
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் காவலர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''வெள்ளிக்கிழமை இரவு அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபால் பகுதியில் உள்ள காவல்குழு மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்ட தீவிரவாதி பிலால் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 3 மாதங்களுக்கு முன்னர், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் வசிக்கும் இடங்களில் இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்தார். அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரின் உடல்நிலை சீராக உள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை தீவிரவாதிகள் பயன்படுத்திய கார்கள் என்பது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை ஆரம்பமாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT