Published : 22 Sep 2018 09:17 AM
Last Updated : 22 Sep 2018 09:17 AM
பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார்.
முதலில் ஒடிசாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு தால்ச்சர் உரத் தொழிற்சாலையைப் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைக்கவுள்ளார். இதையடுத்து அவர் ஜார்ஸுகுடாவுக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் அவர் கர்ஜன்பாகல் நிலக்கரி சுரங்கத்தையும், ஜார்ஸுகுடா-பரபளி-சார்டேகா ரயில் பாதைத் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் சத்தீஸ்கரிலுள்ள ஜான்கிர்-சம்பா மாவட்டத்துக்குச் சென்று, அங்கு கைத்தறி மற்றும் வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் பெந்த்ரா-அனுப்புர் 3-வது ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அவர் டெல்லி திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT