Published : 08 Sep 2014 12:15 PM
Last Updated : 08 Sep 2014 12:15 PM

ஜார்கண்ட்டில் மாவோயிஸ்டுகள் சதி: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்ததில் அந்த தடத்தில் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜார்கண்ட் மாநிலத்தில் லடேகர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.

லடேகர் - பென்டி ரயில் நிலையம் இடையிலான பகுதியில் மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x