Published : 09 Sep 2018 08:30 AM
Last Updated : 09 Sep 2018 08:30 AM

தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்?- ராஜ்நாத் விளக்கம்

அசாமில் அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 3.29 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் 2.89 கோடி பேர் மட்டுமே பதிவேட்டில் சேர்க் கப்பட்டனர். 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று கூறிய தாவது:

அசாம் மாநிலத்தில் வெளி நாட்டினரை அடையாளம் காணவே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உண்மையான இந்தியர்கள் அனைவரும் சேர்க்கப்படுவார்கள். அவர் களின் பெயர்கள் விடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x