Published : 03 Sep 2018 08:30 AM
Last Updated : 03 Sep 2018 08:30 AM

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோய் 

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இப் போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப் பட்டு வருகிறது.

இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மானன் குமார் மிஸ்ரா கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யுமாறு இப் போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஒருமாதம் முன்பு கடிதம் அனுப்பினோம். இதில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் மரபுகள் பின்பற்றப்படும்’’ என்றார். உச்ச நீதிமன்ற பார் அசோசியே ஷன் தலைவர் விகாஸ் சிங், ‘‘100 சதவீதம் ரஞ்சன் கோகோயின் பெயரை தீபக் மிஸ்ரா பரிந் துரைப்பார்’’ என்றார்.

ரஞ்சன் கோகோய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி யாக பொறுப்பேற்றார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்கு களை விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக செயல் படுகிறார் என்று கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகளில் ரஞ்சன் கோகோயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x