Last Updated : 05 Sep, 2018 04:17 PM

 

Published : 05 Sep 2018 04:17 PM
Last Updated : 05 Sep 2018 04:17 PM

3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டீன் ஏஜ் சிறுவன்

உத்தரபிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டு டீன் ஏஜ் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாஜகான்பூர் அருகே உள்ள சிந்தவுலி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

15 வயது சிறுவன், தெருவில் தனியாக நின்றிருந்த சிறுமியை மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சிறுவன் தலைமறைவாகி உள்ளார்.

இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனைத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x