Last Updated : 19 Sep, 2018 10:13 AM

 

Published : 19 Sep 2018 10:13 AM
Last Updated : 19 Sep 2018 10:13 AM

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

விசாரணையின் முடிவில் செப் டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x