Published : 22 Jun 2019 03:26 PM
Last Updated : 22 Jun 2019 03:26 PM

டெல்லி பாஜக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டுல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அடுத்த சில நிமிடங்களில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள் உடனடியாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x