Last Updated : 26 Jun, 2019 09:10 AM

 

Published : 26 Jun 2019 09:10 AM
Last Updated : 26 Jun 2019 09:10 AM

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கொல்கத்தாவில் கைது

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக 4 பேரை கொல்கத்தா போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நியோ-ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்கத்தாவின் சியால்டா பகுதியில் தங்கியிருப் பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கு 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை ஹவுரா ரயில் நிலையத்தில் நேற்று காலை கைது செய்தனர்.

இதுகுறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கைதான 4 பேரில் 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் கள் 3 பேரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து சில நாட்க ளாகத் தங்கியுள்ளனர்.

இங்குள்ள சிலரை ஐஎஸ் தீவிர வாத அமைப்பில் சேர்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் கைதான இந்தியா வைச் சேர்ந்த 4-வது நபர் உதவியுள்ளார்.

அவர்களிடமிருந்து செல் போன்கள், ஜிஹாதி இலக்கியப் புத்தகங்கள் உள்ளிட்டவை பறி முதல் செய்யப்பட்டுள்ளன. அவர் கள் செல்போன்களில் இருந்த சில நபர்களின் புகைப்படங்களையும் போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வரு கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x