Published : 12 Jun 2019 09:49 AM
Last Updated : 12 Jun 2019 09:49 AM

சிறுபான்மையின மாணவ, மாணவியர் 5 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை: மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையினரின் நலன், வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவிகள் பள்ளிக் கல்வியைக்கூட நிறைவு செய்வதில்லை. இந்த பிரச் சினைக்கு தீர்வு காண அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவ, மாண வியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத பயனாளிகள் மாணவிகளாக இருப்பார்கள்.

‘பேகம் ஹஸ்ரத் மஹால்’ மாணவிகள் கல்வித் உதவித் தொகை திட்டத்தில் சிறுபான்மை யின நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டம் வரும் 5 ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

சிறுபான்மையின மாணவி கள் கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் தெரு நாடகங்கள், கலை நிகழ்ச்சி கள் மூலம் விழிப்புணர்வு ஏற் படுத்தப்படும். இந்த திட்டம் முதல் கட்டமாக சிறுபான்மையினர் அதி கம் வசிக்கும் 60 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

மதரஸா திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இதன்படி நாடு முழுவதும் மதரஸா ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறி வியலில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம் மதர ஸா மாணவர்கள் பயன் பெறுவார் கள். சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை மேம்பாடு உறுதி செய்யப்படும்.

இலவச பயிற்சி

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர், பார்ஸி இன மக்கள் மாநில அரசுத் துறைகள், வங்கித் துறை, ரயில்வே, மத்திய அரசு துறைகள் சார்ந்த போட்டித் தேர்வுகளில் பங்கு பெற இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x