Published : 12 Jun 2019 09:38 AM
Last Updated : 12 Jun 2019 09:38 AM

‘2024-க்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர்’

மத்திய அரசில் புதிதாக உரு வாக்கப்பட்டுள்ள ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 2024-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடி நீர் வழங்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள் ளார். குடிநீர் திட்டங்களில் உத்தர பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்கள் பின்தங்கிய நிலை யில் உள்ளன. அந்த மாநிலங் களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நாடு முழுவதும் சுமார் 14 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. வரும் 2024-க்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x