Published : 07 Mar 2018 08:34 AM
Last Updated : 07 Mar 2018 08:34 AM
லோக்பால் அமைப்பதற்கான தேர்வுக்குழுவில் காலியாக இருக்கும் சட்ட நிபுணர் பணியிடத்தை நிரப்ப முன்னுரிமை அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
லோக்பால் தேர்வுக்குழு கூட்டம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்டனர். முறையே, தேர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என்ற முறையில் இவர்கள் கலந்துகொண்டனர்.
மக்களவையின் மிகப்பெரும் எதிர்க்கட்சியின் (காங்கிரஸ்) தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவு குறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறும்போது, “லோக்பால் அமைப்பது தொடர்பாக தேர்வுக்குழு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், இக்குழுவில் சிறந்த சட்டநிபுணர் காலியிடத்தை நிரப்புவது என முடிவு செய்யப்பட்டுளளது” என்றார். இது தொடர்பான வழக்கு ஏப்ரல் 17-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT