Published : 01 Mar 2018 07:53 AM
Last Updated : 01 Mar 2018 07:53 AM
அயோத்தி விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயன்ற ஸ்ரீஜெயேந்திரர் அங்குள்ள மக்களுக்கு சேவை செய்ய ஓர் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இதில் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிக பலன் பெற்று வருகின்றனர்.
காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் முதல்முறையாக அயோத்திக்கு 2001-ல் வந்தார். அப்போது, அங்கு உள்ள மக்கள் போதிய வேலைவாய்ப்பு இன்றி வறுமையில் வாடுவதைக் கண்டு வருந்தினார்.
இதையடுத்து பெண்களின் சுயவேலைவாய்ப்புக்காக பயிற்சி மையம் தொடங்க முடிவு செய்தார். இதற்காக, ‘காஞ்சி-அயோத்தியா நகர வளர்ச்சி அறக்கட்டளை’ தொடங்கி, அதன் சார் பில் அயோத்தியின் பிரமோத்பந்த் பகுதியில் கடந்த 2002, செப்டம்பர் 30-ல் தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி மையம் அமைத்தார். முற்றிலும் பெண்களுக்கான இந்தப் பயிற்சி மையத்தில் இரு குழுக்களுக்கு 6 மாதப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அயோத்தியின் மூத்த பத்திரிகையாளர் சுரேந்தர் ஸ்ரீவாத்சவ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இப்பயிற்சி மையம் மூலம் இதுவரை சுமார் 10 ஆயி ரம் பெண்கள் சுயவேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களில் இந்துக்களை விட முஸ்லிம்களே அதிகம். ஸ்ரீ ஜெயேந்திர ரின் அறக்கட்டளைக்குப் பிறகு இதுபோல் பயிற்சி மையங்கள் பல தொடங்கப்பட்டாலும் அவற் றில் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்றார்.
அயோத்தியில் மத நல்லிணக்கம் ஏற்படுவதற்காக தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி மையத்தில், மற்ற பயிற்சி பெற்ற பெண்கள் கடை நடத்தியோ அல்லது வீடுகளில் இருந்தவாறு பணியாற்றியோ பிழைத்து வருகின்றனர்.
இந்தப் பயிற்சி மையம் அரு கில் கடந்த 2008-ல் சிவன் கோயிலுடன் கூடிய சங்கர மடமும் அமைக்கப்பட்டது. அயோத்தி யின் ராணிகன்ச் பகுதியில் 1972-ம் ஆண்டு முதல் வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் சுமார் 100 மாணவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் வசதியுடன் வேதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ஜெயேந்திரரின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, இந்தப் பயிற்சி மையமும் ஸ்ரீ சங்கர மடமும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT