Published : 04 Mar 2018 01:35 PM
Last Updated : 04 Mar 2018 01:35 PM
திரிபுரா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, மாநில பாஜக தலைவர் விப்லவ் தேவ், டெல்லியில் நேற்று மாலை பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திரிபுராவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் ஆட்சி நடத்தி வந்த இடதுசாரிக் கூட்டணி அரசுக்கு மக்கள் முடிவுகட்டி விட்டனர். வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பாஜகவை தேர்வு செய்துள்ளனர். இதற்காக, திரிபுரா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன். திரிபுரா முதல்வர் பதவி எனக்கு வழங்கப்பட்டால் அதனை நான் கட்டாயம் ஏற்பேன். ஆனால், இதுகுறித்து கட்சியின் நாடாளுமன்றக் குழுதான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு விப்லவ் தேவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT