Published : 29 Mar 2018 11:34 AM
Last Updated : 29 Mar 2018 11:34 AM

இந்தியா - பாகிஸ்தான் இடையே நதி நீர் பகிர்வு சிக்கல்: சிந்து ஆணையக் கூட்டத்தில் விவாதம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து உள்ளிட்ட நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் சிந்து நதி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஓடும் பியாஸ், சட்லஜ், ரவி, செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதி நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. இதற்காக, இருநாடுகளுக்கும் இடையே 1960ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஓடும் நதிகளின் நீரை சர்ச்சையின்றி பகிர்ந்து கொள்ள சிந்து நதி ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் இந்த ஆணையம் கூடி நதிநீர் பகிர்வு தொடர்பாக விவாதிக்கிறது. இதன், 114வது கூட்டம், டெல்லியில் இன்று தொடங்குகிறது. நாளை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே சிந்து மற்றும் பிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வது பற்றி விவாதிக்கப்படுகிறது.

செனாப் நதியில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா அமைத்து வருவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து சிந்து நதி ஆணையக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x