Last Updated : 23 Mar, 2018 05:01 PM

 

Published : 23 Mar 2018 05:01 PM
Last Updated : 23 Mar 2018 05:01 PM

‘‘உண்மை வென்றது ’’ - தீர்ப்பு குறித்து கேஜ்ரிவால் கருத்து

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதன் மூலம் உண்மை வென்றுள்ளது என,  அம்மாநில  முதல்வர்  அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகித்ததாகக் கூறி பதவி பறிக்கப்பட்ட 20 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளதாவது:

''இது உண்மையின் வெற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தகுதிநீக்கம் செய்வது தவறானது. உயர் நீதிமன்றம் டில்லி மக்களுக்கு நீதி வழங்கியுள்ளது. இது மக்களின் வெற்றி. டெல்லி மக்களுக்கு வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த உத்தரவு வந்தது. தகவல் அறிந்ததும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், மேசையைத் தட்டி ஆரவாரம் செய்து தீர்ப்பை வரவேற்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x