Published : 16 Mar 2018 08:34 AM
Last Updated : 16 Mar 2018 08:34 AM
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய அமைச்சர்கள் 2 பேர் உட்பட 4 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் காலியாகும் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்சுக் மாண்டவியா, காங்கிரஸைச் சேர்ந்த நரன் ரத்வா, அமீ யஜ்னிக் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர பாஜகவைச் சேர்ந்த கிர்சித்சிங் ராணா, காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் பி.கே.வலேரா ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று ராணா, பி.கே.வலேரா ஆகியோர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்சுக் மாண்டவியா உட்பட 4 வேட்பாளர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஏ.வி. கரோவா அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT