Last Updated : 06 Mar, 2018 08:14 PM

 

Published : 06 Mar 2018 08:14 PM
Last Updated : 06 Mar 2018 08:14 PM

மோடியை மரியாதையாகக் குறிப்பிடாத பிஎஸ்எப் வீரருக்கு 7 நாள் சம்பளம் கட்

 

பிரதமர் மோடியின் பெயரை மரியாதைக் குறைவாக அழைத்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரருக்கு 7 நாள் ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை பிரிவில் பணியாற்றி வருபவர் கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார். இந்நிலையில் ஒவ்வொருநாள் காலையிலும் ஜீரோ பரேட் நடக்கும். இங்கு வரும் வீரர்கள் தங்கள் வருகையை தெரிவிக்க மோடி புரோகிராம் என்று வார்த்தையை கூறி வருகையைத் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி இதேபோன்று ஜீரோ பரேடுக்கு அனைத்து வீரர்களும் வந்துவிட்டனர். அப்போது, வீரர்கள் வருகையை குறித்து தெரிவிக்கும்போது, 'ஹானரபிள் பிரைம் மினிஸ்டர் மோடி புரோகிராம்' என்று மரியாதையாக அழைப்பதற்குப் பதிலாக மோடி புரோகிராம் என்று சஞ்சீவ் குமார் கூறிவிட்டார்.

இதையடுத்து, பிரதமர் மோடியை அவமரியாதைக்குரிய வகையில் அழைத்தமைக்காக, பிஎஸ்எப் சட்டம் 1968-ன் பிரிவின்படி, சஞ்சீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டு அவரின் 7 நாள் ஊதியத்தை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x