Published : 26 May 2019 10:35 AM
Last Updated : 26 May 2019 10:35 AM

தண்ணீர்  பிரச்சினையைத் தீர்க்க விரைவில் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம்: நிதின் கட்கரி உறுதி

கோதாவரி -  கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாகப் பெருக்கும் வகையில் காவிரி - கோதாவரி  நதிநீர்  இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்  என ஏற்கெனவே கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையிலும் தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு  வலியுறுத்தியதின் அடிப்படையிலும், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில்  தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாட்டு  மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில்  கோதாவரி -  கிருஷ்ணா  நதிநீர் இணைப்புத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான்  எங்கள் முதல் வேலை'' என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்  உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான  நதிநீர் பங்கீடு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.  காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டின் தென்கோடிவரை தண்ணீர் கிடைக்கும்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x