Published : 26 May 2019 10:35 AM
Last Updated : 26 May 2019 10:35 AM
கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாகப் பெருக்கும் வகையில் காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையிலும் தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியதின் அடிப்படையிலும், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை'' என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டின் தென்கோடிவரை தண்ணீர் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT