Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM
பிரதமர் மோடி எப்போதும் சாதி அரசியலில் ஈடுபட்டதில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இதுகுறித்து நேற்று அவர் கூறும்போது, “சாதியை வைத்து பிரதமர் மோடி என்றுமே அரசியல் செய்ததில்லை. அவர் செய்வது எல்லாமே நாட்டின் வளர்ச்சி அரசியல்தான். தேசியவாதத்தின் மீது அதிக பற்று கொண்டவர் மோடி. சாதி அரசியல் செய்கிறார் மோடி என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அர்த்தமற்றது. சாதியை வைத்து ஏழைகளை ஏமாற்றுபவர்கள் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது. சாதியின் பெயரால் அரசியல் செய்பவர்கள் சொத்துகளை மட்டுமே சேர்த்து வைத்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT