Published : 24 Apr 2019 12:00 AM
Last Updated : 24 Apr 2019 12:00 AM
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அத்தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமது தாயாரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவரிடம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் கட்சி விரும்பினால், நான் வாரணாசியில் போட்டியிடுவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT