Published : 07 Apr 2019 08:28 PM
Last Updated : 07 Apr 2019 08:28 PM

‘மீண்டும் மோடி அரசு’ - 2019 மக்களவைத் தேர்தல் கோஷத்தை வெளியிட்டது பாஜக

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் கோஷமாக ‘மீண்டும் மோடி அரசு’ என்ற கோஷம் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் வெற்றியை தேடி தரும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலை ‘இனி மோடி அரசு’ என்ற கோஷத்துடன் பாஜக சந்தித்தது. வளர்ச்சியை முன்னிறுத்தி குஜராத்தில் மோடி செய்த சாதனைகள் நாடுமுழுவதும் தொடரும் என்ற கருத்துடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இந்தநிலையில் 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான புதிய கோஷத்தை பாஜக வெளியிட்டுள்ளது. ‘மீண்டும் மோடி அரசு’ என்ற கோஷத்துடன் தேர்தலை சந்திக்கப்போவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்க வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்தே நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் தொடருவதற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்போம். மீண்டும் மோடி அரசு என்பதே எங்கள் கோஷமாக இருக்கும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x