Published : 02 Apr 2019 01:25 PM
Last Updated : 02 Apr 2019 01:25 PM

தகவல் ஆணையர்கள் மீதான புகாரை விசாரிக்க அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு: மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு

நாட்டின் சுயாட்சி அமைப்புகளில் ஒன்றான தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர்கள் மீது வரும் புகார்களை விசாரிக்க அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை சுயாச்சியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும் தகவல் உரிமை ஆணையத்தின் சுதந்திரம் மீதான தாக்குதல் என்று முன்னாள் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் உரிமை ஆணையர்கள் மீது வரும் புகார்களை விசாரிக்க எந்த நடைமுறையை பின்பற்றுவீர்கள் என்று சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்காக மத்திய அரசு இப்போது குழு அமைத்துள்ளது.

விசாரணை நடைமுறையை எவ்வாறு பின்பற்றுவீர்கள் என்றுதான் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதே தவிர, எந்தவிதமான உத்தரவையும், வழிகாட்டுதலையும் பிறப்பிக்கவில்லை. அப்படி இருக்கும் போது, மத்திய அரசு கேபினெட் செயலாளர் தலைமையில் குழு அமைக்க முயன்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய பணியாளர் மற்றும்  பயிற்சித்துறை தலைமையில் தலைமைத் தகவல் ஆணையர், 7 தகவல் ஆணையர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தகவல் ஆணையர்களும், அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் விசாரமைக் குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தனர்.

மத்திய அரசு உரிய பதில் அளிக்கக்கோரி, தலைமைத் தகவல் ஆணையர் சுதிர் பார்கவா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமை தகவல் ஆணையர் பார்கவா நிருபர்களிடம் கூறுகையில், " மத்திய அரசின் கருத்தை அறிய விரைவில் கடிதம்அனுப்பப்படும்" என்று தெரிவி்த்துவிட்டு சென்றார்.

இதுகுறித்து முன்னாள் தகவல் ஆணையர் ஒருவர் கூறுகையில், " மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் அல்லது எந்த ஒரு அதிகாரி ஒருவர் தகவல் ஆணையரை கேள்வி கேட்கவோ, சம்மன் அனுப்பவோ, தண்டிக்கவோ சட்டப்படி எவ்வாறு முடியும். அந்த குழுவில் உள்ள மற்ற செயலாளர்கள் விசாரணைக் குழுவில் இடம் பெறலாம் என்று வரைவுத் தி்ட்டத்தில் இருக்கிறது. இது தகவல் ஆணையின் சுதந்திரம், சுயாச்சி மீதான கடுமையான தாக்குதல். இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டும்.

ஒரு தகவலை கேட்டு மனுத் தாக்கல் செய்யும் மக்கள், தான் எதிர்பார்க்கும் தகவல் கிடைக்காத நிலையில், தகவல் ஆணையர் மீது புகார் அளிக்கிறார்கள். ஆனால், ஆணையம் ஒருவிஷத்தில் அச்சமின்றி முடிவுஎடுக்க முழுமையான சுதந்திரம் அவசியமாகும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 14(1) ன்கீழ், தலைமை தகவல் ஆணையர் அல்லது எந்த தகவல் ஆணையர் பதவி நீக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம்உண்டு. அவர்கள் மீது தவறான நடத்தை, தகுதியின்மை போன்றவை விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டு, உச்ச நீதிமன்ற விசாரணையில் உறுதி செய்தபின் அவர்களை குடியரசு தலைவர் நீக்க முடியும் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x