Last Updated : 17 Mar, 2019 10:50 AM

 

Published : 17 Mar 2019 10:50 AM
Last Updated : 17 Mar 2019 10:50 AM

கர்நாடகாவில் ராகுல் போட்டியிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தொண்டர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், “ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேண்டும்” என ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் கர்நாடகாவில் போட்டியிட்டுள்ளனர். எனவே இந்தியாவின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட இருக்கும் ராகுல் காந்தியும் இங்கு போட்டியிட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே கருத்தை காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவும் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து துணை முதல்வர் பரமேஷ்வர் கூறுகையில், “அமேதியில் போட்டியிடும் ராகுல், இரண்டாவது தொகுதியாக கர்நாடகாவில் போட்டியிட வேண்டும். எங்களது கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் கருத்தில் கொண்டால் தேர்தல் முடிவில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x