Published : 12 Mar 2019 11:08 AM
Last Updated : 12 Mar 2019 11:08 AM

சைப் அலிகான், சோனாலிக்கு நோட்டீஸ்

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ் தான் மாநிலம் ஜோத்பூரை அடுத்த கன்கனி கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின்போது சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள், 2 மான்களைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு சல்மான் கானுக்கு நீதி மன்றம் தண்டனை வழங்கியது. ஆனால் சைப் அலிகான் உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, 5 பேர் விடுவிக் கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மனு தொடர்பாக பதில் அளிக் குமாறு சைப் அலி கான், நீலம் கோத்தாரி, துஷ்யந்த் சிங், சோனாலி பிந்த்ரே, தபு ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x