Published : 12 Mar 2019 10:57 AM
Last Updated : 12 Mar 2019 10:57 AM
பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 263 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ‘டைம்ஸ் நவ்' சேனல் ஒளிபரப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் 263 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை இந்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது. உயிரிழந்த தீவிரவாதிகளில் 18 பேர் மூத்த தளபதிகள் ஆவர். 25 பேர் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஆவர்.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், பாலகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் அங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்களும் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சதித் திட்டம்
புல்வாமா தாக்குதல் போல காஷ்மீரில் மேலும் ஒரு தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT