Last Updated : 18 Feb, 2019 03:07 PM

 

Published : 18 Feb 2019 03:07 PM
Last Updated : 18 Feb 2019 03:07 PM

அரசாங்கம் இன்னும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது: அகிலேஷ் கேள்வி

உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் இறந்து மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்த பிறகும் மவுனம் ஏன், இன்னும் அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் இறந்து மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்தபிறகும் ஏன் இன்னும்மௌனம் நீடிக்கிறது. ஒவ்வொருநாளும் வீரத் தியாகிகளின் இறுதி ஊர்வலங்களுடன் பாஜக அரசியல்வாதிகள் வரும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?''

இவ்வாறு தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவோடு சேர்த்து புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் ஒரு மேஜர் உள்பட சுட்டுக்கொலை என்ற செய்தியை டேக் செய்யப்பட்டுள்ளது.

நேற்று வெளியிட்ட இன்னொரு பதிவில் அதற்கு முன்தினம் உயர் தொழில்நுட்பம் மிக்க தில்லி-வாரணாசி வண்டி பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்கவிழா குறித்து பாஜக தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

''தொடக்கவிழாவுக்குப் பிறகு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தீப்பொறிகள் தென்பட்டன. பெட்டிகளில் மின்சாரம் செயலிழந்தது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் ஒரு இடத்தில் பாதியிலேயே நின்றுபோனது. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வளர்ச்சியின் கதையாக பேசப்படுகிறது.

விவசாயிகள் பசியோடு உள்ளனர். இளைஞர் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். பாதுகாப்பு செயல்பாடுகளோடு முற்றிலும் சிதைந்தநிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதாரமோ வீழ்ச்சியடைந்துள்ளது.''

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தனது அடுத்தடுத்த நாள் பதிவுகளில் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுடல்லியிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் முதல் அதிவேக ரயில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே நின்றபிறகு டெல்லிக்கு மீண்டும் திரும்பியது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x