Published : 26 Feb 2019 12:55 PM
Last Updated : 26 Feb 2019 12:55 PM
பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதற்கு இந்திய திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின.
12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு இந்திய திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் ராஜமௌலி: இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஜெய்ஹிந்த்
மகேஷ் பாபு: நம் இந்திய விமானப்படையை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். வீரர்களுக்கு சல்யூட்.
ரம்யா: என் நாடு.. என் பெருமை... நமக்காக உயிர் துறந்த தியாகிகளுக்கும், துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.
வரலட்சுமி சரத்குமார்: வீரர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். முடிந்தவரை மனிதர்களாக நடந்துகொண்டதற்கும், அப்பாவிகளைத் தாக்காமல் இருந்ததற்கும் நன்றி.
ரகுல் ப்ரீத் சிங்: இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.
அக்ஷய் குமார்: தீவிரவாதிகளின் இருப்பிடங்களை தாக்கிய இந்திய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துகள். இனியும் அமைதியாக இருக்க முடியாது.
சித்தார்த்: ஒரு நாட்டுடன் போர் புரியும் அளவுக்கு பாகிஸ்தானிடம் அரசியல் ஒற்றுமையும் இல்லை, ராணுவ ஒழுங்கும் இல்லை, பொருளாதார பலமும் இல்லை. கொலைகாரர்களையும், பயங்கரவாதிகளையும் பாதுகாப்பதையும் நிறுத்துங்கள். வரலாறு தானாக மாறும். ஜெய்ஹிந்த்.
ஜுனியர் என் டி ஆர்: சரியான பதிலடியை நம் நாடு கொடுத்திருக்கிறது. இந்திய விமானப்படைக்கு சல்யூட்.. ஜெய்ஹிந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT