Published : 07 Feb 2019 04:19 PM
Last Updated : 07 Feb 2019 04:19 PM
தலைநகர் டெல்லியின் நொய்டா பகுதியில் மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
30-35 நோயாளிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு சென்று காப்பாற்றினார்கள் மீட்புப் படையினர்.
இதுகுறித்து ஊகடகங்கள் தரப்பில், ”டெல்லியின் நொய்டா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் இருதய சிகிச்சை நிறுவனம் உள்ள கட்டிடத்தில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் பால்கனியில் நின்று கொண்டு உதவி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில்மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பணியாளர்கள் நோயாளிகள் கட்டிடத்திலிருந்து வெளியேற உதவி புரிந்து வருகின்றனர். இதுவரை 30 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர் ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை என்றும் தீயை அணைக்கும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT