Published : 02 Feb 2019 07:21 PM
Last Updated : 02 Feb 2019 07:21 PM

ஆனந்த் டெல்டும்டே கைது சட்ட விரோதம்: உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜனவரி 2018 பீமா கோரேகான் வன்முறையில் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்ட சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது சட்ட விரோதம் என்று கூறி அவரை உடனடியாக விடுவிக்குமாறு புனே அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

உச்ச நீதிமன்ற காவலையும் மீறி புனே போலீஸ் அவரை சனிக்கிழமை காலை 3.30 மணிக்குக் கைது செய்தனர்.  மும்பை விமான நிலையத்தில் அவர் தீடீரென கைது செய்யப்பட்டதையடுத்து அவரது வழக்கறிஞர் ரோஹன் நாஹர் புனே அமர்வு நீதிமன்றத்தை நாடி புனே போலீஸ் மீது நடவடிக்கைக்கும், அவரை விடுதலை செய்யவும் கோரினார்.

 

“உச்ச நீதிமன்றம் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிப்ரவரி 11ம் தேதி வரை தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்க அவகாசம் அளித்துள்ளது, அதுவரை கைது செய்யக்கூடாது என்றும் பாதுகாப்பு அளித்திருந்தது. இந்நிலையில் போலீஸ் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சட்ட விரோதம்” என்று கோர்ட்டில் விண்ணப்பித்திருந்தார்.

 

ஆனால் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வாலா பவார் கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, விசாரணை நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததையடுத்தே கைது செய்தோம் என்று கூறியது.  ஆனால் நீதிமன்றம் டெல்டும்டே வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

 

பீமாகோரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 10வது நபராவார் டெல்டும்டே. முன்னதாக புனே போலீஸார் சமூக ஊழியர்களையும், உரிமை போராட்ட வழக்கறிஞர்களையும் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று கூறி கைது செய்தது.  இவர்கள் அனைவரும் ‘சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம்’ என்ற தன்னிச்சையான இரும்புக்கர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட டெல்டும்டே மற்றும் பிறர் பிரதமர் மோடியை கொலைச் செய்ய சதி செய்ததாகக் கைது செய்யப்பட்டனர் என்று புனே போலீஸ் விளக்கமளித்தது.

 

இவர்களுக்கு எதிராக கடும் சட்டங்களைப் புனே போலீஸ் பாயவைக்க, அதன் கிராமப்புற அங்கமோ இதே வழக்கில் தொடர்புடைய 2 இந்துத்துவா தலைவர்களான மனோகர் என்கிற சம்பாஜி பிதே மற்றும் மிலிங் எக்போத் ஆகியோரை விடுவித்துள்ளது.  கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இரண்டு இந்துத்துவா தலைவர்களைத்தான் முக்கியக் குற்றவாளிகள் என்றனர். போலீஸ் இவர்களை கொஞ்ச நேரம் கைது செய்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை, இவர்கள் பிற்பாடு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x