Published : 14 Feb 2019 08:25 AM
Last Updated : 14 Feb 2019 08:25 AM

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் பேரணி: மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வரு மான சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக்தந்திரிக் ஜனதா தளக் கட்சி தலைவர் சரத் யாதவ் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் கனிமொழி எம்.பி., சமாஜ்வாதி கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோரும் இப்பேரணி யில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அங்கு சென்று அர்விந்த் கேஜ்ரிவாலிடம் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு சென்றனர்.

மம்தா நடத்திய கூட்டம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார். மத்திய பாஜக அரசுக்கு எதிரான இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சி களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இது, மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு முன்னோட்டமாக அரசியல் வட் டாரத்தில் கருதப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x