Published : 12 Feb 2019 02:05 PM
Last Updated : 12 Feb 2019 02:05 PM
திரிபுராவில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெண் அமைச்சரிடம் அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஒருவர் நடந்துகொண்டவிதம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
திரிபுராவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் பிப்லம் குமார் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஓன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பிரதமர் மோடி, திரிபுரா முதல்வர் பிப்லம் குமார் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் சமூக நலத்துறை அமைச்சர் சந்தனாவின் இடுப்பில் கை வைக்கிறார். அதனை உணர்ந்த சந்தனா அமைச்சரது கையைத் தட்டி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது'' என்று செய்தி வெளியானது.
மேலும் திரிபுரா எதிர்க்கட்சிகள் மனோஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மனோஜ் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண் அமைச்சர் இதுவரையில் எந்தப் புகாரும் தெரிவிக்காதபோது எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக திரிபுரா பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT