Published : 17 Jan 2019 08:47 AM
Last Updated : 17 Jan 2019 08:47 AM

நாட்டில் 99.78 % குடும்பங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இந்தியா சாதனை

இந்த ஆண்டு ஜனவரி 15-ம் வரை நாடு முழுவதும் 99.78 சதவீத குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு கொடுத்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பான புள்ளி விவரம் மத்திய அரசின் ‘Saubhagya dashboard’ என்ற இணையதளத்தில் வெளியாகி யுள்ளது.

இதன்படி 2017, அக்டோபர் 11 முதல் ஜனவரி 15 வரை 21.23 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மின் இணைப்பு தரப்பட்ட குடும்பங்கள் 99.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் 4.70 லட்சம் அல்லது 0.22 சதவீத குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு தரவேண்டியுள்ளது. இந்த குடும்பங்கள் சத்தீஸ்கர் (20,320), மேகாலயா (94,555), ராஜஸ்தான் (1.13 லட்சம்), அசாம் (2.42 லட்சம்) ஆகிய 4 மாநிலங்களில் உள்ளன.

எஞ்சிய 25 மாநிலங்களிலும் 100 சதவீத குடும்பங்களுக்கும் மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மின் இணைப்பு பணி வேகத்தை பொறுத்தவரை கடந்த டிசம்பரில் மட்டும் 23.48 லட்சம் குடும்பங்களுக்கும் ஜனவரியில் 6.21 லட்சம் குடும்பங்களுக்கும் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஜனவரியில் தரப்பட்ட மின் இணைப்பில் 2-ம் தேதி மட்டும் 1.20 லட்சம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் நாட்டின் 100 சதவீத குடும்பங்களுக்கும் மின்சார இணைப்பு என்ற சாதனையை இந்தியா படைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மணிப்பூரில் லெய்சாங் என்ற கிராமத்துக்கு மின்சார இணைப்பு கொடுத்ததை தொடர்ந்து,

நாட்டின் 100 சதவீத கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு என்ற சாதனையை இந்தியா கடந்த 2018 ஏப்ரல் 28-ம் தேதி படைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x