Published : 28 Jan 2019 07:15 PM
Last Updated : 28 Jan 2019 07:15 PM
கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பெண் ஒருவர் சித்தராமையாவை சந்தித்து மனு அளிக்க வந்தார். மைக்கை வாங்கி அவர் ஆவேசமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா, அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயன்றார். அப்போது, சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டது. துப்பட்டா நழுவி விழுந்தது.
#WATCH Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting in Mysuru. #Karnataka pic.twitter.com/MhQvUHIc3x
— ANI (@ANI) January 28, 2019
ஆனாலும் அந்த பெண் தனது குறைகளை ஆவேசமாக தெரிவித்தார். இதைதொடரந்து அவரை சித்தராமையா எச்சரித்தார்.
இந்த காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு தெரியவில்லை என பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT