Last Updated : 10 Jan, 2019 09:05 PM

 

Published : 10 Jan 2019 09:05 PM
Last Updated : 10 Jan 2019 09:05 PM

மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக தேசிய தலைவர்களிடம் ஆதரவு தேடும் பிரகாஷ்ராஜ்: கெஜ்ரிவாலுடன் சந்திப்பு

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதன் வெற்றிக்காக தேசிய அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு தேடத் துவங்கி உள்ளார்.

 

கர்நாடக மாநில மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் இறங்கியுள்ளார். இதற்காக அவர் தேசிய தலைவர்களை நேரி ல் சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கியுள்ளார் இந்த வரிசையில் முதல் தலைவராக டெல்லி முதலமைச்சர ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார்

 

இதுகுறித்து கெஜ்ரிவால் மற்றும் பிரகாஷ்ராஜ் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக இதுபோல் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர்கள் வெற்றி பெறுவது மிகவும் சிரமம். இந்தப் பிரச்சனையை தவிர்க்க பிரகாஷ்ராஜ் புதிய உத்தியை கையாண்டு உள்ளதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x