Published : 07 Dec 2018 02:52 PM
Last Updated : 07 Dec 2018 02:52 PM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விழா மேடையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது எழுந்த நின்ற கட்கரி, திடீரென மயங்கி சரிந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாங்கிப் பிடித்தார். இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கட்காரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘விழாவில் கலந்து கொண்டபோது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டது. இதனால் மயக்கம் ஏற்பட்டது. தற்போது நான் நலமுடன் உள்ளேன். எனது உடல்நலம் குறித்து விசாரித்த நலம் விரும்பிகளுக்கு நன்றி’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT