Published : 29 Sep 2014 10:24 AM
Last Updated : 29 Sep 2014 10:24 AM

என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அசாம் மாநிலம், கோக்ரஜாரில் உள்ள வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடை பெற்ற மோதலில் தீவிரவாதிகள் டோம்சதோரங், லோஹாருன், மைசரன், அந்த அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரான முஹார் பாசுமத்தாரி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். வரும் அக்டோபர் 3-ம் தேதி போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் எழுச்சி நாள் கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி பாதுகாப்புப் படையினர் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் தாக்குதல் நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, கோக்ரஜாரிலும், சிராங்கிலும் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x