Published : 27 Dec 2018 11:36 AM
Last Updated : 27 Dec 2018 11:36 AM

வீட்டில் பட்டாசு வெடித்து 2 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கப்படும் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பாரபங்கி மாவட்டம், குனாவ்லி தருபூர் என்ற கிராமத்தில் முகம்மது ஹாசிம் என்பவர் தனது வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் முகம்மது ஹாசிம் வீடு மட்டுமின்றி அண்டை வீடுகளும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இவர்கள் சர்ஜு (15), முகம்மது வைஷ் (28) என அடையாளம் காணப்பட்டனர்.  மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x