Published : 25 Dec 2018 11:07 AM
Last Updated : 25 Dec 2018 11:07 AM
மேகாலயாவின் கசான் பகுதி லும்தாரி கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. கடந்த 13ம் தேதி இந்த சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 370 அடி ஆழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை போராடி வருகிறது. ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளம் வடியவில்லை.
இந்நிலையில் சுரங்கத் தொழிலாளர் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்த பிறகு மீட்புப்பணிகள் தொடரும் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவித்துள்ளது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
முதல்கட்டமாக 15 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT