Published : 19 Dec 2018 09:26 AM
Last Updated : 19 Dec 2018 09:26 AM
ஒவ்வொரு மாநிலத்திலும் சில தொகுதிகள் இருக்கின்றன - தொடர்ந்து அந்தத் தொகுதி மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அந்தக் கட்சியே மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும். மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இப்படிப் பல தொகுதிகள் இருப்பதை இந்தத் தேர்தல் முடிவின் பின்னணியில் பார்க்க முடிகிறது. ராஜஸ்தானின் பேகுண், மண்டல், டோங்க், கேக்ரி உள்ளிட்ட 17 தொகுதிகள் இத்தகைய அரசியல் தனித்தன்மையைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, கடந்த 10 தேர்தல்களில் பேகுண், மண்டல் ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சியே ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதேபோல், மத்திய பிரதேசத்தின் கர்கோனே, நேபாநகர், நிவாஸ் உள்ளிட்ட 9 தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிக்கே ஆட்சி யோகம் அடித்திருக்கிறது. குறிப்பாக, கர்கோனே தொகுதியில், கடந்த 1967 தேர்தல் முதல் இதுவரை நடந்த 12 தேர்தல்களில் இந்தத் தொகுதியின் வெற்றிக் கட்சியே ஆட்சிக்கும் வந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT