Published : 18 Dec 2018 08:55 AM
Last Updated : 18 Dec 2018 08:55 AM
அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைத்தாலும் அதிகாரிகள் குழப்பிவிடுகிறார்கள் நம்மூரில். உத்தர பிரதேச அரசு கொண்டுவந்த விவசாயக் கடன் தள்ளுபடி நடவடிக்கையின்போது, வங்கிகள் குளறுபடி செய்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கடன் வாங்கிய விவசாயிகளின் எண்ணிக்கையில் வங்கிகள் தவறான தகவலைத் தந்திருப்பதை அரசு கண்டுபிடித்திருக்கிறது. 66 லட்சம் விவசாயிகள் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கியதாக வங்கிகள் கூறியிருந்தன. உண்மையில், 44 லட்சம் பேர் மட்டும்தான் கடன் வாங்கியிருந்தனர். அது மட்டுமல்ல, விவசாயிகள் அல்லாத 1.76 லட்சம் பேருக்கு ரூ.866 கோடியை வங்கிகள் விவசாயக் கடனாக வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. 2008-09-ல் காங்கிரஸ் தலைமையிலான அரசு இதேபோல் விவசாயக் கடன் ரத்து திட்டம் அமல்படுத்தியபோதும் இப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT