Published : 29 Nov 2018 10:04 AM
Last Updated : 29 Nov 2018 10:04 AM
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களைக் கூறினர். இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஸ்தானா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்மி வஸ்ரி, நவம்பர் 28-ம் தேதி வரை அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘அஸ்தானாவின் புகாரில் அலோக் வர்மாவுக்கு எதிராக உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. மேலும் தவறான தகவல்களை அஸ்தானா தெரிவித்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் இணை இயக்குநர் சர்மா இருவரும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு வியாழக்கிழமை (இன்று) சென்று அஸ்தானாவுக்கு எதிரான ஆவணங்களைப் பார்வை யிடலாம்’’ என்று நீதிபதி உத்தரவிட் டார். மேலும், அஸ்தானாவுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க டிசம் பர் 7-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT