Published : 30 Nov 2018 04:15 PM
Last Updated : 30 Nov 2018 04:15 PM
கடவுள் அனுமன் தலித் அல்ல, அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்று தேசிய பழங்குடி ஆணையத்தின் தலைவர் நந்த குமார் தெரிவித்தார்.
லக்னோவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் தேசிய பழங்குடி ஆணையத்தின் தலைவர் நந்த குமார் பங்கேற்றார். அப்போது அவர் அனுமன் குறித்துப் பேசுகையில், “ கடவுள் அனுமன் குறித்து பல்வேறு பேச்சுக்கள் வருகின்றன. ஆனால், அதைத் தெளிவுபடுத்த வேண்டும். கடவுள் ராமரின் படையில் கழுகுகள், கரடிகள், குரங்கள் இருந்தன என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
ஓரான் பழங்குடியின வகுப்பினர் பேசும் குருக் மொழியில் குரங்குகள் “வனர்” கோத்திரத்தைச் சார்ந்தவை. கன்வார் பழங்குடி வகுப்பில், அனுமன் “கிளான்” கோத்திரத்தைச் சேர்ந்தவர். அதேபோல, பல்வேறு பழங்குயின வகுப்பில் கித் அல்லது கழுகு என்பது கோத்திரமாக கருதப்படுகிறது. ஆகவே கடவுள் ராமரின் படையில் பழங்குடியினஅதிகமாக இருந்து போரில் ஈடுபட்டுள்ளனர் “ எனத் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அனுமன் ஒரு காட்டுவாசி, தலித் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த வார்த்தைக்கு அவர் 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி ராஜஸ்தானில் உள்ள வலதுசாரி இந்து அமைப்பு ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT