Last Updated : 01 Nov, 2018 08:46 PM

 

Published : 01 Nov 2018 08:46 PM
Last Updated : 01 Nov 2018 08:46 PM

இன்றுமுதல் நடைமுறை: முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை ‘யுடிஎஸ் ஆப்ஸ்’ மூலம் பெறலாம்

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டை இனி ‘யுடிஎஸ் ஆப்ஸ்’(செயலி) மூலம் நாடுமுழுவதும் பெறும் வசதியை ரெயில்வே துறை இன்று நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் ரயில்வேயின் யுடிஎஸ் ஆப்ஸை தங்கள் செல்போனில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கும் பயணிகள் இனி டிக்கெட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. புறநகர் இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைத்து மண்டல ரயில்களிலும் இந்த ஆப்ஸை பயன்படுத்தி முன்பதிவில்லாத டிக்கெட்டை பெற முடியும்.

இந்த ஆப்ஸை பதிவேற்றம் செய்தபின், அந்தச் செயலியில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். புதிய யூசர் ஐடி, பாஸ்வேர்ட், செல்போன் எண், ஆகியவற்றைப் பதிவு செய்தபின் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இந்தச் செயலியை ரயில்நிலையத்துக்கு உட்பட்ட 5 கிலோமீட்டருக்குள் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஒரு பயணி அதிகபட்சமாக 4 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். மேலும், பதிவு செய்த பயனாளிகள் ரயில்நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டும், மாதாந்திர பயணச்சீட்டும் இந்த ஆப்ஸ் மூலம் பெற முடியும்.

இந்த யுடிஎஸ் செயலி கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சோதனை முயற்சியாகக் குறிப்பிட்ட சில ரயில்நிலையங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அதன்பின் படிப்படியாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய ரயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

2018, ஜனவரி மாதத்தின்படி 1.8 லட்சம் பயணிகள் நாள்தோறும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் மாதம் 4.4 லட்சம் பயணிகளும், அக்டோபர் மாதத்தில் 4.75 பயணிகளும் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்ஸ் மூலம் நாள்தோறும் ரயில்வே துறைக்கு ரூ.45 லட்சம் கிடைத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x