Published : 21 Nov 2018 10:03 AM
Last Updated : 21 Nov 2018 10:03 AM

ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த கப்பல்களை தயாரிப்பதற்கு தேவையான வடிவமைப்பு, தொழில்நுட்பம், பாகங்களை ரஷ்யா வழங்கும். இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.3,600 கோடி ஆகும். கப்பல்களை தயாரிப்பதற்கான முழு செலவு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. முதல் போர்க்கப்பல் வரும் 2026-லும், 2-வது கப்பல் 2027-லும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

இதுபோன்ற 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ரூ.7,150 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கையெழுத்தானது. இந்தக் கப்பல்கள் 2022-23 வாக்கில் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ரக நவீன ரக ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x