Published : 01 Nov 2018 10:28 AM
Last Updated : 01 Nov 2018 10:28 AM
காஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை இச்சண்டை நடந்தது.
அரைசல் வட்டாரத்தில் உள்ள பூகூ கிராமத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்தன. இதையொட்டி பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது தீவிரவாதிகள் மறைந்துகொண்டு துப்பாக்கிகளால் சுட்டனர். இரு தரப்புக்கும் தொடர்ந்து கடுமையான மோதல் உருவாகியது.
இதில் பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடியில் இருதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கிராமத்தில் இன்னும் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்வதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT