Published : 18 Nov 2018 08:49 AM
Last Updated : 18 Nov 2018 08:49 AM
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் உலகின் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேல் சிலை நிறுவப் பட்டது. இச்சிலையை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 31-ம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், விண்ணில் இருந்து படேல் சிலையை புகைப்படம் எடுத்து அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஸ்கை லேப்’ என்ற நிறுவனம், ஒருங்கிணைந்த செயற்கைக்கோள்களை விண் ணில் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது. குறைந்த உயரத் தில் சுற்றிவரும் அந்தச் செயற்கைக் கோள்கள் பூமியைத் துல்லியமாக, மிகத் தெளிவாகப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன.
அந்த வகையில் சர்தார் வல்லபபாய் படேல் சிலையின் தலைக்கு மேலிருந்து ஸ்கை லேப் நிறுவனம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் வானுயர கம்பீரமாக படேல் சிலை நிற்பது போல் உள்ளது. அருகில் நர்மதை ஆறு அழகாகத் தெரிகிறது. சிலைக்கு செல்லும் வழி, அருகில் உள்ள சாலை போன்றவையும் மிகத் தெளிவாக புகைப்படத்தில் பதிவாகி உள்ளன. தற்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT